ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

ஈப்போ, மார்ச் 31 –

ஈப்போ, பேராக் ஸ்தேடியும் பாசார் ராமாடான் னில் உள்ள பகுதியில் சட்டவிரோதமாக கடன்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பிடப்பட்ட பசாரில், இச்சம்பவம் குறித்து வியாபாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 1.01 நிமிட காணொளியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக முறையற்ற உரிமம் இல்லாமல் கடன் வழங்கும் வணிக அட்டைகளை விநியோகம் செய்தல் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகிய நடவடிக்கையில் அந்நபர்கள் ஈடுபட்டதாக மொகமாட் யுஸ்ரி கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போதுமான விவரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து அந்நபர்களை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மொகமாட் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்