பட்டவோர்த், மார்ச் 31 –
பட்டவோர்த் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற இரு நபர்களை பிடிக்க முற்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் படுங்காயமடைந்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 வயதுடைய போலீஸ் அதிகாரிக்கு இடது விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டத்துடன் உடலில் பல இடங்களில் உள்காயமும் சுயநினைவின்றி காணப்பட்டதாக Seberang Perai Utara போலீஸ் தலைவர் சித்தி நோர் செலாவாத்தி சாட் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு 3 மணியளவில் கம்பூங் தெலுக் மற்றும் பட்டவோர்த் சுற்றியுள்ள பிரதான பகுதிகளில் சோதனை மேற்கொள்ளபட்டதாக சித்தி நோர் குறிப்பிட்டார்.
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த 19 க்கும் 20 க்கும் வயதிற்கு உட்பட்ட நபர்களை தடுக்க முற்பட்ட வேளையில் பணியில் இருந்த போலீசார் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக சித்தி நோர் அறிவித்தார்.