ஜோகூர், மார்ச் 28 –
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மூவாருக்கு அருகில் பிற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்த 20 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் படுத்தவாக்கில் இரு கால்களை உயர்த்திக் கொண்டு மிக ஆபத்தான முறையில் அந்த ஆடவர் வாகனத்தை செலுத்திய காட்சி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெர்சிங், கம்பூங் ஶ்ரீ பந்தாய் யில் அந்த ஆடவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.