எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின

ஜோகூர், மார்ச் 28 –

ஜோகூர், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் ரிந்திங் கிற்கு செல்லும் பகுதியில் எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது.

இன்று காலை 11.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்ததாக அதன் செயலாக்க கொமான்டெர், அன்வார் அப்துல்லா தெரிவித்தார்.

Fuso ரகத்திலான ஒரு லோரி, ஒரு Triton ரக வாகனம், ஒரு ம்.பி.வி வாகனம், போரோடுவா விவா ரகத்தைச் சேர்ந்த மூன்று கார்கள், ஒரு ஹொன்டா சிட்டி மற்றும் ஒரு மினி கூப்பர் ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாரும் காயமின்றி, தத்தம் வாகனங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்