பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 –

நாட்டில் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்களான ஹெனிக்கென் மலேசியா பெர்ஹாட் மற்றும் காஸ்பெர்ட் ப்ரேவி மலேசியா பெர்ஹாட் ஆகியவை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தனது பீர் வகைகளின் விலையை 5 விழுக்காடு உயர்த்துகின்றன. .

இரு நிறுவனங்களும் தயாரிக்கும் பீர் வகைகளின் விலை உயர்த்தப்படுவது தொடர்பான அறிக்கையை அந்த நிறுவனங்களிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா காப்பிக்கடைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க்யுவ் கொக் மெங் தெரிவித்துள்ளார்.

பீர் வகைகள் ஆகக்கடைசியாக விலை உயர்த்தப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதமாகும். அப்போது விலை உயர்வு 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்