கிளந்தான், ஏப்ரல் 02 –
கிளந்தான், ரன்தாவு பஞ்சாங்-ங்கில் மலேசியா-தாய்லாந்து-ந்து எல்லை பகுதியிலுள்ள கோலோக் ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று இரவு மணி 10.38 வாக்கில் தாய்லாந்து-ந்தைச் சேர்ந்த அச்சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக, மாலை மணி 6.12 அளவில் அதுக்குறித்து தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து ரன்தாவு பஞ்சாங் தீயணைப்பு மீட்பு படை, போலீஸ் உட்பட சுமார் 20 வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து-ந்தின் முக்குளிப்பு படையினர், இரவு வாக்கில், அந்நாட்டு எல்லையை ஒட்டிய ஆற்றுப் பகுதியில், அச்சிறுவனின் உடலை மீட்டனர்.
பின்னர், அச்சிறுவனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக, தாய்லாந்து-ந்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.