பெர்சாத்து கட்சி தேர்தலில் அதிகமான புதிய முகங்கள் உச்சமன்றத்தில் இடம்பெறக்கூடும்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 –

இவ்வாண்டு நடைபெறவுள்ள பெர்சாத்து கட்சி தேர்தலில், உச்சமன்ற உறுப்பினர்களில் அதிகமான புதிய முகங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கட்சி தேர்தலை விட, தற்போது பெர்சாத்து-வில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளதால் அந்த சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக ஹுலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசொல் வாஹித் கூறினார்.

கூடுதல் மக்கள் பிரதிநிதிகள் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெர்சாத்து-வை வழிநடத்துவதற்கான உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதில், பேராளர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக டத்தோ ரோசொல் வாஹித் குறிப்பிட்டார்.

நடப்பில், பெர்சாத்து 31 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 18 மாத காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்