கோலாலம்பூர், மார்ச் 19 –
இந்தியப் பிரஜை ஒருவரை மடக்கி, 300 வெள்ளி ரொக்கம் மற்றும் கைப்பேசியை கொள்ளையிட்டதாக இரு நபர்கள், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
32 வயது Mohd Fadhi Ghani மற்றும் 52 வயது ம். இளங்கோவன் என்ற அந்த இரு நபர்கள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் கோலாலம்பூர், புடு எல்.ஆர்.டி. நிலையத்தின் முன்புறம் சன்டிப் சிங் என்ற இந்தியப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்டித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.