இளைஞரிடம் பாலியல் தொல்லை, நபர் கைது

மெர்சிங், மார்ச் 19 –

பதின்ம வயதுடைய இளைஞரிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் கட்சி ஒன்றின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர், மெர்சிங்கில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகார் அடிப்படையில் அரசியல் கட்சி ஒன்றின இளைஞர் பிரிவுப் பொறுப்பாளரை தங்கள் கைது செய்துள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

36 வயதுடைய அந்த நபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதை மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ராசாக் அப்துல்லா சனி உறுதி படுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்