இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர்- மார்ச் 21

இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் தொலைப்பேசி வாயிலாக தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அந்த உரையாடலில், தமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதல் தலைவர் தாங்கள்தான் என பிரபோவோ சுபியாண்டோ தம்மிடம் கூறியதாக, பிரதமர் அவரது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நட்பின் மதிப்பை அது குறிக்கிறது. மலேசியாவுக்கு நெருக்கமானதாகவும் முக்கியமான அண்டை நாடு எனும் சிறப்பையும் அது கொண்டுள்ளதாக கூறிய பிரதமர், பிரபோவோ சுபியாண்டோ-வின் தலைமைத்துவத்தில் அந்நாடு வளர்ச்சியையும் வளப்பத்தையும் பெறும் என நம்பிக்கையைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்