கோலாலம்பூர், மே 21-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்றிரவு மணி 9க்கு, நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையை வழங்கவுள்ளார்.
உள்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் பிரதமரின் உரை ஒளிப்பரப்படவுள்ளது.
அந்த நேரலை உரையை, அனைவரும் மறக்காமல் பார்க்கும்படி, பிரதமர் அவரது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இவ்வேளையில், சம்பந்தப்பட்ட நேரலையில் பிரதமர் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து, மலேசியர்களுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.