இரண்டு நாள் டோல் கட்டணம் இலவசம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 –

வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9 ஆகிய இரு தேதிகளில் அனைத்து பிரதான நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணம் இலவசம் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த டோல் கட்டணம் இலவசம், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் டோல் கட்டண இலவசத்தினால் அரசாங்கம் 37.6 மில்லியன் வெள்ளி செலவினத்தை ஏற்கிறது என்று அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்