புத்ராஜெயா, மார்ச் 28 –
வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப் போல கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி புதன் கிழமை மற்றும் 11 ஆம் தேதி வியாழக்கிழமை நோன்புப்பெருநாள் கொண்டாடப்படும் பட்சத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து விடுமுறை வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, அதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.