ஈப்போ, மார்ச் 24 –
வடக்கை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 262.9ஆவது கிலோமீட்டரில், இரும்பு துகள்களை ஏற்றிவந்த டிரெய்லர் லாரி ஒன்று நடுபாதையில் குடைசாய்ந்தது.
சாலை முழுவதும் இரும்பு துகள்கள் கொட்டி கிடப்பதால், ஈப்போ விலிருந்து தெரோவோங் மெனோரா வை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை மணி 4.42 அளவில் போக்குவரத்து தடைபட்டவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டதாக PLUS Malaysia நிறுவனம் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என பேராக் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்துள்ளது.