இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாக்காரம் செய்தது மற்றும் அவரின் ஆண் நண்பரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

அந்த இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அவ்விருவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு அவர்கள் நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று ஹுசேன் ஓமார் மேலும் கூறினார்.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டு மாணவியையும் , அவரின் ஆண் நண்பரையும் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்திய அவ்விரு போலீஸ்காரர்களும், இந்த வக்கிர செயலை புரிந்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்