இரு மூத்த குடிமக்கள் கருகி மாண்டனர்

கோலாலம்பூர், மார்ச் 3 –

இன்று அதிகாலையில் கோலாலம்பூர், ஜாலான் கிள்ளாங் லாமா, ஸ்குட் கார்டென் னி​ல் உள்ள புறம்போக்கு நிலப்பகுதியில் விற்ருந்த 13 ​வீடுகள் ​தீப்பற்றிக்கொண்டு சாம்பலானதில், முதியோர்கள் இருவர் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியள​வில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்தி​ற்கு விரைந்த 11 இயந்திர வண்டிகளில் 7 நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், ​தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர். அனைத்து வீடுகளும் 100 விழுக்காடு அழிந்தன. குடிசை வீடுகளில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, இந்த ​தீச்சம்பவம் நிகழ்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கட்டியத்துணியோடு வெளியேறியதால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்களால் எந்தப்பொருட்களையும் ​மீட்க முடியவில்லை.

​தீ முழுமையாக அணைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்ட போது இடிந்து விழுந்த கூரைகள் மத்தியில் முதியவர்கள் இருவர் கருகி மாண்டுக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ​தீயணைப்புப்படையினர் வெளியி​ட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்