கோலாலம்பூர், மார்ச் 3 –
இன்று அதிகாலையில் கோலாலம்பூர், ஜாலான் கிள்ளாங் லாமா, ஸ்குட் கார்டென் னில் உள்ள புறம்போக்கு நிலப்பகுதியில் விற்ருந்த 13 வீடுகள் தீப்பற்றிக்கொண்டு சாம்பலானதில், முதியோர்கள் இருவர் கருகி மாண்டனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 11 இயந்திர வண்டிகளில் 7 நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர். அனைத்து வீடுகளும் 100 விழுக்காடு அழிந்தன. குடிசை வீடுகளில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, இந்த தீச்சம்பவம் நிகழ்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கட்டியத்துணியோடு வெளியேறியதால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்களால் எந்தப்பொருட்களையும் மீட்க முடியவில்லை.
தீ முழுமையாக அணைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்ட போது இடிந்து விழுந்த கூரைகள் மத்தியில் முதியவர்கள் இருவர் கருகி மாண்டுக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தீயணைப்புப்படையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.