இளைஞரிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றச்சாட்டு

17 வயது இளைஞனை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றுத்திறனாளி ஒருவர் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

35 வயது முகமது ஹபீஸ் அல்-ஹிலால் மௌலா முராத் என்ற அந்த மாற்றுத்திறனாளி நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) – வின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி கோத்தா பாருவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்