ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

ஈப்போ, மார்ச் 20 –

பேராக், ஈப்போ, ஜாலான் குவால கங்சார் ரில் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கட்டடத்தில் திடிரென ஏற்பட்ட தீயில், அது முற்றாக அழிந்தது.

நேற்றிரவு நிகழ்ந்த அந்த தீச்சம்பவம் குறித்து இரவு மணி 10.25 வாக்கில் தகவல் கிடைத்ததை அடுத்து ஈப்போ தீயணைப்பு மீட்பு படையினருடன் இதர தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், அவ்விடத்தை அவர்கள் அடைந்த போது, அக்கட்டடம் 80 விழுக்காடு வரையில் தீக்கிரைக்கானதாக, பேராக் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர், சபோரோட்சி னோர் அகமாட் கூறினார்.

தீயில், அந்த கட்டடத்தில் இருந்த KLORIN, ALCOHOL முதலான இராசயன பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கூறிய அவர், இரவு மணி 11.15 வாக்கில் சுமார் 51 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வந்ததாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்