ஷா அலாம், மார்ச் 20 –
நோன்பு துறப்பின் போது, தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரமடைந்த பாக்கிஸ்தானிய ஆடவர் ஒருவர், சக தொழிலாளியான வங்காளதேச ஆடவரை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூர், ஷா அலாம் செக்ஷேன் 36இல் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்ட கொள்கலனில் நேற்று மாலை மணியளவில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
இரவு மணி 7.30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் 51 வயதுடைய ஆடவரைக் கைது செய்தனர்.
தனது ஆரஞ்சு பானத்தை 49 வயது வங்காளதேச ஆடவர் அறுந்தியதால், ஆத்திரமடைந்த அவர், சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு அவ்வாடவரை குத்தியுள்ளார்.
விசாரணையில் அவ்விருவரும் ஓரிடத்தில் வேலை செய்து வருவதும் ஒன்றாக தங்கியிருப்பதும் உறுதி படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவ்வாடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.