ஈரானிய அதிபர் மறைவு, மலேசியா வருத்தம்

கோலாலம்பூர், மே 20-

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து, நொறுங்கி, விபத்துக்குள்ளான சம்பவத்தில் அவர் மாண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டது.

ஈரானிய மக்களுடன் இணைந்து மலேசியாவிற்கு தனது ஆதரவை வழங்கி வருவதிலும், தன்னுடைய உறுதியான, வெளிப்படையான போக்கிலும் ஒரு தன்னிகரற்றத் தலைவராக மறைந்த ஈரானிய அதிபர் விளங்கியுள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி சுட்டினார்.

ஆகக்கடைசாக கடந்த ஆண்டு அமெரிக்கா, நியூயோர்க்கில் ஈரானிய அதிபரை தாம் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் மலேசியா மற்றும் ஈரான் தொடர்புடைய விவகாரங்களை தாங்கள் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் . கிழக்கு அசர்பைஜானில் மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்