ஈரானில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம், மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, ஜன – 4,

ஈரான், தெஹ்ரான், கெர்மான் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 95 பேர் உயிரிழந்த வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

ஆகக்கடையான நிலவரங்களை தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதகரத்தின் மூலமாக விஸ்மா புத்ரா கண்டறிந்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்