உம்னோ-வின் இரு தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்க சாத்தியம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு ஆதரவளித்துள்ள பெர்சாத்து-வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், உம்னோ-வின் இரு முன்னாள் தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்கும் சாத்தியம் உள்ளதாக, இல்ஹாம் சென்டர்-ரைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஹீசாமுதீன் பாக்கர் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு தொடங்கி 6 தவணைகள், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த டான் ஸ்ரீ நோ ஓமர், அதே தொகுதியிலும், PAS கட்சியில் இணைந்துள்ள உம்னோ-வின் முன்னாள் பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்னுார் மூசா, குவா முசாங் அல்லது ஜெலி தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றாராவர்.

அவ்விரு தலைவர்களும் அரசியலில் அதிக அனுபவங்களையும் தலைமைத்துவத்தையும் கொண்டிருப்பதால், அவர்களை பேரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளராக்க வாய்ப்புள்ளதாக, ஹீசாமுதீன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்