முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்

பாத்து பாஹாட், மார்ச் 28 –

கடந்த புதன்கிழமை மாலை 5.33 மணியளவில் வீட்டை விட்டு வெளியே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜோகூர், பத்து பஹாட், ஜாலான் பாரிட் யானி பகுதியில் 80 வயதுடைய அந்த முதியவர் சாலையோரத்தில் ஒரு பாதாளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த முதியவரின் உடல், பின்னர் தீயணைப்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக யோங் பெங் தீயணைப்பு நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்