ஜோகூர்பார – மெர்சிங் சாலையின் 26.5 ஆவது கிலோ மீட்டரில் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் எதிர்திசையில் காரை செலுத்திய வங்காளதேச ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் 3.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 43 வயதுடைய அந்த அந்நிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Hussin Zamora தெரிவித்தார்.
அந்த ஆடவரை கைது செய்வதற்கு முன்னதாக 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி பதிவு வாயிலாக சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளை நிற Nissan Almera ரக காரை எதிர்திசையில் செலுத்திய அந்த நபரின் செயல், இதர வாகனமோட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது என்று Hussin Zamora தெரிவித்தார்.