கிளந்தான் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் 16 சட்ட விதிகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று கூட்டரசு நீதீமன்றம் தீர்ப்பு அளித்தது மூலம் வழக்கில் வெற்றி பெற்றுள்ள தாயும்,மகளும் கொலை மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக போலீஸ் புகார் செய்துள்ளனர்.
ஒரு வழக்கறிஞரான Nik Elin Zurina Nik Abdul Rashid என்ற மாது, கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது மூலம் தாமும், தமது மகளும் கொலை மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக மூன்று போலீஸ் புகார்களை செய்துள்ளார்.
கழுத்து அறுக்கப்படும் என்ற தன்மையில் அந்த கொலை மிரட்டல் வந்துள்ளதாக Nik Elin Zurina குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு வரும் இத்தகைய மிரட்டல்கள் எண்ணில் அடங்காது. சம்பந்தப்பட்டவர்கள் தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதற்கு முன்னர் , அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தையும்,அதில் காத்திருக்கும் சவால்களையும் புரிந்து கொள்வதற்கு சற்று நேரத்தை ஒதுக்கி அதன் உள்ளடக்கத்தை படிக்க வேண்டும் என்று Nik Elin Zurina அறிவுறுத்தியுள்ளார்.