உலு திராம், மே 18-
உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிங்கப்பூர் பிரஜை உட்பட எழுவரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.
ஜோகூர், செரி அலாம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த எழுவருக்கும், மாஜிஸ்திரேட் ஹிடாயத்துல் ஸ்யுஹதா ஷம்சுதீன் முன்னிலையில் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.
இன்று சனிக்கிழமை தொடங்கி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பபதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 7 நபர்களில் சிங்கப்பூர் பிரஜையை தவிர்த்து மற்ற அறுவர் சார்பில் ஆஜராவதற்கு தேசிய இலவச சட்ட ஆலோசனை அறவாரியத்தின் சில வழக்கறிஞர்கள் முன் வந்தனர்.