எஸ்கலேட்டர் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கை

சுபாங் ஜெயா, எல். ஆர்.டி நிலையத்தில் ஆறு வயதுடைய சிறுமியின் வலது கை எஸ்கலேட்டர் கைப்பிடியில் சிக்கிக் கொண்டது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10:33 மணியளவில் சிலாங்கூரிலுள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறை மையத்திற்கு கிடைக்கப் பெற்ற அழைப்பினை தொடர்ந்து ஆறு அதிகாரிகள், உறுப்பினர்கள் உட்பட ஒரு தீயணைப்பு வாகனம் அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புதுறையின் துணைத்தலைவர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

எஸ்கலேட்டர் கைப்பிடியில் சிக்கி கொண்ட அச்சிறுமியின் கை பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

மேலும், சிகிச்சை பெறுவதற்கு அச்சிறுமி மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்