கிளந்தான், மார்ச் 31 –
கிளந்தான் தாய்லாந்து எல்லையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்ததன் மூலம் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.
கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவின் குழுவினரால் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக கிள்ந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்துக் முகமாட் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.
இச்சோதனையில் 2 துப்பாக்கிகள், 47 தோட்டாக்கள், 5 கிலோ போதைப்பொருள் உட்பட 17,200 methamphetamine மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்டதாக முகமாட் சாக்கி கூறினார்.
கைது செய்யபட்ட அந்நபர்கள் 30 க்கும் 56 க்கும் வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.