தொழிலதிபர் மோசடியில் வெ. 400,000 வெள்ளியை இழ‌ந்தா‌ர்

பினாங்கு, மார்ச் 31 –

பினாங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் அதிகாரியை போல் நடித்து தொலைப்பேசி மோசடி புரிந்த நபரிடம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 200 வெள்ளியை இழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 4.07 மணியளவில் உள்ளூர்வாசியான 36 வயதுடைய அந்நபரிடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் தனது தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்ததாகவும் அதில் தன்னை இன்ஸ்பெக்டர் ஹசிசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் பாதிக்கப்பட்டவரின் பெயர் குற்றப் பதிவுகளில் இருப்பதாகவும் அதிலிருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை தருமாறும் அந்நபர் கூறியுள்ளார்.

பாதிக்கபட்டவரும் பயந்து அந்நபர் கேக்கின்ற தொகையை வங்கியின் மூலம் செலுத்தியுள்ளார்.

பின், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலிஸில் புகார் அளித்ததாக மொகமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்