ஒன்பது வயது மகனை சித்ரவதை செய்ததாக பெண் மீது குற்றச்சாட்டு

வங்சா மாஜூ, மார்ச் 29-

தனது ஒன்பது வயது மகனை சித்ரவதை செய்ததாக பெண் ஒருவர் மீது இன்று செஷனஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.

33 வயதுடைய அப்பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் வங்சா மாஜூ -வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அப்பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தாம் குற்றம் புரியவில்லை என்று கூறியதாக தெரியவந்துள்ளது.

குற்றம் என்று நிரூமிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அப்பெண் 6,000 வெள்ளி செலுத்தி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி டத்தோ னு’அமன் மஹ்மூத் ஸுஹுதி அனுமதித்த வேளையில் மாதத்திற்கு ஒருமுறை காவல்நிலையத்திற்கு வரவும் அவரின் பாஸ்போர்ட்-டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்