மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, மார்ச் 29-

தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி தண்டனைக்குறிய தீர்ப்பை வழங்க ஈப்போ சேசியேன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிபதி நோரிட மோஹட் அர்தனி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 38 வயதுடைய அவ்வாடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி இரவு மணி 10 க்கும் 12 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பத்து கஜாஹ், கம்போங் சேரி ரஹ்மத் – டில் 19 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்