ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது

நிலாய், மார்ச் 23.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 283 ஆவது கிலோமீட்டரில் தெற்கை நோக்கி, நிலாய் அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு 20 மாத கைக்குழந்தை ஒன்று காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக மாண்டது. .

கடந்த வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் பெரோடுவா பெட்சா ரகத்தை சேர்ந்த இரு கார்கள் மற்றும் டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம் ஒன்று சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் காரிலிருந்து அந்த பெண் குழந்தை தூக்கி எறியப்பட்டதாக நிலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கி நான்கு பயணிகளுடன் 24 வயது ஆடவர் செலுத்திய டொயோட்டா அல்பார்ட் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற பெரோடுவா பெட்சா காரை மோதியதில் அந்த கார் மற்றொரு பெரோடுவா பெட்சா காரை மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தலையில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த குழந்தை சிரம்பான், துவான்க்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் குழந்தை மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அப்துல் மாலிக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்