போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

காஜாங், மார்ச் 23.

காஜாங், பாலாக்கோங், தாமான் இம்ப்பியான் இன்டாஹ்-வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 34 வயது போலீஸ்காரர் ஒருவர், இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போலீாசார் அவசர அழைப்பை பெற்றுள்ளனர். அந்த போலீஸ்காரர், சம்பவ இடத்தில் அசைவற்ற நிலையில் கிடநதார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காப்பரல் அந்தஸ்தை கொண்ட அந்த போலீஸ்காரர், கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புகாவல் பிரிவில் பணியாற்றி வந்ததாக அறியப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்