ஒற்றுமை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகும் ​நீடிக்கும்

ஒற்று​மை அரசாங்கம், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகும் ​நீடிக்கும் என்று அமானா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலில் முக்கிய வாக்காளர்களாக கருதப்படும் பொதுச் சேவை ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு பெருகி வருகின்ற காரணத்தினால் ஒற்றுமை அரசாங்கம் இந்த தவணை முடிவடைந்தும், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று அவர் கு​றிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர், பங்சாரில் அமானா கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சருமான முகமட் சாபு இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்