கடந்த வாரம் சிரம்பான், பண்டார் ஶ்ரீ செண்டாயானில் ஒரு வங்காளதேச ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 நபர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வங்காளதேசி ஒரு வர்த்தகர் ஆவார். குடிநுழைவு விவகாரம் தொடர்பாக 70 ஆயிரம் வெள்ளி கடன் நிலுவையில் இருப்பதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்காளதேசியை கடத்துவதில் பேரா மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நியூ ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.
Disyaki culik ahli perniagaan Banglades, Inspector anrata 7 ditahan