நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பை ஏற்றது முதல் சம்பளத்தை பெறப்போவதில்லை என்று தாம் எடுத்துள்ள உறுதிப்பாட்டில் இன்னமும் தீர்க்கமாக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மீட்சிப்பெறும் வரையில் ஒரு சல்லிக்காசை கூட சம்பளமாக பெறப்போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தமது இந்த உறுதிப்பாட்டை பின்பற்றி தமது தலைமையிலான அமைச்சரவை உறுப்பின்ர்களும் ஒவ்வொரு மாதமும் தங்களின் சம்பளத்தில் 20 விழுக்காட்டுத் தொகையை பிடித்தம் செய்வதற்கு அளித்துள்ள வாக்குறுதியை இன்னமும் பின்பற்றி வருவதாக அன்வார் தெரிவித்தார்.