கடைவீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 26 வெளிநாட்டினர் கைது

ஜொகூர் பாரு, ஏப்ரல் 17-

ஜொகூர் பாருவில் உள்ள கடை வீடுகளில் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனையில், பயணக் கடப்பிதழை கொண்டிருக்காத சுமார் 26 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

21 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட 23 வங்காளதேச ஆடவர்கள், இரு இந்திய நாட்டு பிரஜைகள், ஒரு இந்தோனேசிய பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டதாக JOHOR குடிநுழைவு துறையின் இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நேற்று செவ்வாய்க்கிழமை பின்னிரவில் 15 கடை வீடுகளில் தங்கியிருந்த சுமார் 115 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் 26 பேர் கைது செய்யப்பட்டதாக பஹாருதீன் தாஹிர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்