பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7 –
ஸ்.ஸ் 6 வில் உள்ள வர்த்தக கட்டிடத்தின் 13 ஆவது மாடியிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2.50 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்ததாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஷாஹாருல்னிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
37 வயதுடைய அப்பெண் வெடிங் பேலன்னர் ஆக பணிபுரிந்து வருவதுடன் அச்சம்பவம் இடத்தில் அவர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் கண்டெடுக்கப்பட்டதாக ஷாஹாருல்னிசாம் கூறினார்.
அப்பெண்ணுக்கு வேலையில் அழுத்தம் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.
இருந்த போதிலும் இதுக்குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷாஹாருல்னிசாம் மேலும் விவரித்தார்.