கணவன் மனைவி இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்

Simpang Ampat, Jalan Solok Uban – னில் 4 பேர் ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையடித்ததில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பாதிக்கப்பட்ட தம்பதியர்களின் மகள் சத்தம் கேட்டு தனது அறையின் கதவை திறந்தபோது சந்தேகிக்கும் இருவர் கூர்மையான கத்தியுடன் அப்பெண்ணை நோக்கி வந்ததாகவும் கதவை பூட்டிக் கொண்டு காவல்துறைக்கு தொடர்பு கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு துறை, சிம்பாங் அம்பாட் காவல்நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Arshad Abu கூறினார்.

சந்தேகிக்கும் நபர்கள் Silver நிற Honda City ரக வாகனத்தை பயன்படுத்தி வந்ததாகவும் காரின் பதிவு எண் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது விசாரணையின் முடிவுகளில் தெரியவந்ததாக Arshad Abu விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்