கர்ப்பிணி பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொள்ளவில்லை

பாத்து பாஹாட், மார்ச் 31 –

தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாக மெக்கானிக் ஒருவர் இன்று பாத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

மஜிச்திரேட் நுராசிடா ரஹ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 28 வயதுடைய மொகமாட் இஸ்மாயில் மொகாமாட் சின் குற்றம் புரியவில்லை என்று தெரிவித்தார்.

வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாக குற்றச்சாட்டப்பட்ட அந்நபர், தாம் குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஜாமினில் விடுவிக்க முடியுமா? அப்படி இல்லையென்றால் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய தனது கர்ப்பிணி மனைவியை காயப்படுத்தியிருப்பதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்