கோலாலம்பூர், மார்ச் 31 –
தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் மொகமாட்டிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதாக பெஜுவாங் கின் தலைவர் முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார்.
தனது தந்தையின் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தனது இரு சகோதரர்களான மிர்சான் மற்றும் மொக்சானி ஆகியோருக்கு ம்.ஏ.சி.சி தலைமை ஆணையரான அசாம் பாக்கி கையெழுத்திட்ட நோட்டீஸை கண்டதாகவும் முக்ரிஸ் கூறினார்.
இந்த விசாரணைக்கு உதவும் வகையில் தனது இரு சகோதரர்களும் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.