குவாலா திரங்கானு, மார்ச் 31 –
பாலியல் நடவடிக்கைகளுக்கு ஒரு பெண்ணை கடத்தியதாக கட்டுமான தொழிலாளி ஒருவர் மீது குவாலா திரங்கானு செஷென் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.
நீதிபதி சுல் சகிகுடின் சுல்கில்பி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 29 வயதுடைய பஸ்லி ஜாபார் குற்றம் புரியவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.
அந்நபருடன் சேர்ந்து 48 வயதுடைய ஆசிரியரான ஹஸ்ப்யானிசாம் மன்ஸோர்ரும் குற்றமற்றவர் என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு 2.35 மணியளவில் ஜாலான் சுல்தான் ஓமார் ரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் நடவடிக்கைகளுக்காக 29 வயதுடைய பெண்ணை கடத்தியதாக அவ்விருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.