கல்லுடைப்பு பகுதியில் நிலச்சரிவு , ஒருவர் பலி

பண்டார் சௌஜானா புத்ரா, ஜன – 4,

பந்திங், பண்டார் சௌஜானா புத்ரா அருகில் கல்லுடைப்புப்பகுதியில் இன்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகம்மட் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

பண்டார் சௌஜானா புத்ரா, ஜாலான் எஸ் பி 2, ஸ்ப்ரிரிங் எனர்ஜ தஞ்சோங் குவாரி என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர், 1.2 மீட்டர் ஆழத்தில் புதையுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்