கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலகுபு பாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அத்தொகுதியை அம்னோ கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அந்த சட்டமன்றத்தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற போதிலும் ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த தொகுதி தற்போது எந்த கட்சி வசம் உள்ளதோ அக்கட்சிக்கு அம்னோவும், பாரிசான் நேஷனலும் மதிப்பு அளிக்கும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்