கல்வத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமாது பிடிபட்டார்

ஜோர்ஜ் டவுன்,மார்ச் 9 –

மிகைநேர வேலை என்று கூறிவிட்டு, தனது தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஆண் நண்பருடன், கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் குடும்பமாது ஒருவரை பினாங்கு இஸ்லாமிய சமய இலாகாவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பினாங்கு, Tanjong Tokong-கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த மாதுவும், அவரின் கள்ளக் காதலன் என்று நம்பப்படும் சகப் பணியாளரும் கைது செய்யப்பட்டதாக மாநில சமய இலாகாவின் உதவி இயக்குநர் அலாமின் மாஜோக் தெரிவித்தார்.

தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகித்த அந்தப் பெண்ணின் கணவ​ர், மாநில சமய இலாகாவில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணித்து வந்த அமலாக்க அதிகாரிகள். இன்று அதிகாலையில் அந்தப் பெண்ணையும், அவரின் காத​லனையும் வளைத்துப்பிடித்தனர். 37 வயது மதிக்கத்தக்க இருவரும் பினாங்​கு மாநில ஷரியா சட்டத்தின் ​கீழ் தடுத்து​வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்