ஜோர்ஜ் டவுன்,மார்ச் 9 –
மிகைநேர வேலை என்று கூறிவிட்டு, தனது தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஆண் நண்பருடன், கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் குடும்பமாது ஒருவரை பினாங்கு இஸ்லாமிய சமய இலாகாவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் பினாங்கு, Tanjong Tokong-கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த மாதுவும், அவரின் கள்ளக் காதலன் என்று நம்பப்படும் சகப் பணியாளரும் கைது செய்யப்பட்டதாக மாநில சமய இலாகாவின் உதவி இயக்குநர் அலாமின் மாஜோக் தெரிவித்தார்.
தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகித்த அந்தப் பெண்ணின் கணவர், மாநில சமய இலாகாவில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணித்து வந்த அமலாக்க அதிகாரிகள். இன்று அதிகாலையில் அந்தப் பெண்ணையும், அவரின் காதலனையும் வளைத்துப்பிடித்தனர். 37 வயது மதிக்கத்தக்க இருவரும் பினாங்கு மாநில ஷரியா சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.