பேராக், மார்ச் 9 –
தம்மை இலக்காக கொண்டு, தமது பெற்றோர் வீட்டின் முன், ” மிரட்டல் குறிப்பு” துண்டு காகிதங்களை வீசியிருக்கும் சந்தேகப்பேர்வழிகள், விரைவில் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
பேரா, மஞ்ஜோங் , அயேர் தாவார் ரில் உள்ள தமது பெற்றோர் வீட்டில் துண்டுக்காகிதங்களை விட்டு சென்றுள்ள நபர்களின் செயல் ஆபத்தானதாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஆயர் தாவாரின் உள்ள தனது சகோதரரும்,பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கே கோ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி, தீயிட்ட சம்பவத்திற்கு பின்னர் தற்போது தமது பெயரை சுட்டிக்காட்டி “இஸ்லாத்திற்கு சவால் விடாதே” என்று எழுதி, தமக்கு மிரட்டல் விடுத்து இருப்பது தற்போது ஒரு போக்காக மாறிவருவது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ங்கா கோர் மிங் கூறினார்.
86 வயதை கடந்து விட்ட தமது பெற்றோர் சரிவர நடக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று தாம் பெரிதும் கவலைக் கொள்வதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.