கல்வி மையமாக பாகான் டத்தோ மேம்படும் !

12வது மலேசியத் திட்டத்தின் இறுதிக் காலத்தில் கல்விக்கான மையப் புள்ளியாக பாகன் டத்தோ உருவாகும்.

அம்மாவட்டத்தில் தற்போது பாலிடெக்னிக், மாரா அறிவியல் கல்லூரி, அறிவியல் இடைநிலைப் பள்ளி உட்பட நான்கு கல்வி நிறுவனங்கள் உள்ளன. RMK12 இன் இறுதிக் காலத்தில், மேலும் இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இன்னும் 30 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் அந்தக் கல்வி நிறுவனத்தில் 400 மாணவர்கள் பயில வழி வகை செய்யும் என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான ஸாஹிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்