காணாமல் போன மூன்று நபர்களை தேடி வருகின்றனர்

திரெங்கானு, புக்கிட் ஜன்டா மன்டி- யில் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வழிதவறிய மூன்று நபர்களை தீயணைப்பு, மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

அம்மூன்று நபர்களும் மலை ஏறிய பொழுது பாதை தவறியதுடன் மீண்டும் திரும்பும் வழி தெரியாமல் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தீயணைப்பு துறைக்கு நேற்று மாலை 4:29 மணியளவில் அவசர தொடர்பு கொண்டதாக தெரியவந்துள்ளது.

மழைக்காலமாக இருப்பதனாலும் செங்குத்தான மலைப்பாதை உட்பட பல தடங்கள் இருப்பதால் அந்நபர்களை தேடும் முயற்சி தொடரப்பட்டு வருவதாக திரெங்கானு தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் அஸ்மான் அலியாஸ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்