18,000 லீட்டர் நீர் யூ.எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பபட்டது

நீர் தட்டுப்பாட்டு சிக்கலை எதிர்கொண்டிருக்கும் மலேசிய சபா பல்கலைக்கழக யூ.எம்.எஸ் மாணவர்களுக்கு 18,000 லீட்டர் நீர் அனுப்பப்பட்டது.

இப்பிரச்னையை குறித்து செபங்கார் நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொண்டிருப்பதாக உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.

யூ.எம்.எஸ் மாணவர்களுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படாமல் இருக்க இந்நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ முஸ்தபா கூறினார்.

சபா மாநில நீர்த்துறையும் (ஜான்ஸ்) யூ.எம்.எஸ் நிர்வாகமும் வளாகத்தில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீர் சென்றடைவதை உறுதி செய்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்