கோத்தா பாரு, ஏப்ரல் 04-
கோலா கிராய், மானிக் உராய், டத்தாரான் லெமாங்-கில் உள்ள பொது கழிவறைக்கு முன், தனது காதலனை வயிற்றில் மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் மீது ஏற்கனவே போதைப்பொருள் குறித்த குற்றப்பதிவுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 28 வயதுடைய அப்பெண் திரெங்கானுவை சேர்ந்தவராவர் என்று கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் கூறினார்.
கைது செய்யப்பட்ட அப்பெண் நேற்று முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகம்மது சாக்கி தகவல் தெரிவித்தார்.